|
இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்)
அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்
ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்)
இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற
இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம்
முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகின்றது.
மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள்
கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு
வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை
தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
பைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி
கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக
புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன்
பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.
ஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில்
பல வசனங்கள் உள்ளன.
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக்
கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும்
அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு
பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
(ஆதியாகாமம் 17:20)
ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள்
மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின்
மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே
சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
தன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம்
அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
அப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும்
உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது
உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன்
சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு
சொல்வதெல்லாவறறையும் கேள்.
அடிமைப் பெண்ணின் மகனும் உன்
வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு
ஜாதியாக்குவேன் என்றார்.
அபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு
துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல்
வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி
விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின்
வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள்
பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை
நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும்
தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள்.
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன்
வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு
என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும்
இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால்
பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்
என்றார்.
தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு
தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர்
நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள்.
தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து
வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே
வல்லவனானான்.
அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய
தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு
விவாகம் பண்ணி வைத்தாள்.
(ஆதியாகமம் 21:10 முதல்
21:21வரையுள்ள வசனங்கள்)
இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின்
சிறப்பை அறிந்துக் கொள்ளலாம்.
தேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும்
பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை
உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான்
அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற
பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை
பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும்
அரேபிய சமுகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது.
இந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின்
வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப்
பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ
குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை
சேர்த்துள்ளனர்.
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ
கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய்
கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால்
அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக.
அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை
எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும்
அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள்
எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.
(ஆதியாகமம் 16:11,12)
இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர்
நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி
விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும்
இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு
வழங்குவாரா...
இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை
நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது
நுழைக்கப்பட்டிருக்கின்றது.
இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால்
இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை
அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.
இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள்
கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம்.
தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா....
ஈசாக்கையா.....
ஆப்ரஹாம் இஸ்வேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார்
என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின்
சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும்
நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம்
பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள்.
அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள்.
ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது
ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட
முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.
இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு
வருவோம்.
(இஸ்மவேல்) அவருடன்
நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்:
'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக
நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து
என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே
செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள்
பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.'
(அல்குர்ஆன்: 37:102 )
இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது
இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை
ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட
நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத்
திணித்துள்ளார்கள்.
பைபிள் என்ன சொல்கின்றது?
அப்போது அவர்:
உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன்
நேசக்குமாரனுமாகிய
ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்
கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான்
உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக
பலியிடு என்றார்
(ஆதியாகமம் 22:2)
இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான்
என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும்
இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற
வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற
பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு
திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம்.
எப்படி?
நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர்
'உன் புத்திரன்'
'ஏகசுதன்' என்ற வார்த்தையைப்
பயன்படுத்துகிறார்.
'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று
பொருள்.
உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின்
உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு
ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம்
இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார்.
ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம்
என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16)
தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல்
குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார்.
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு
வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5)
இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14
ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு
குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர்
சொல்லி இருந்தால் நிச்சயமாக
'ஏகசுதன்' என்ற
வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது.
ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர்
பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது
ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது
சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல்
மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து
வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?
இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள்
என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க
முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார்
ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை
சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே
அவர்களின் பதிலாக இருக்க முடியும்.
இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான
விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம்.
ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண்
கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக்
குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக
நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில்
ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட
நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று
தீர்பளிக்கும்.
ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும்.
அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது
யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப்
பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த
பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற
முடியும்.
இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன்
என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ
உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து
விடுகின்றது.
அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த
பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து
தேசத்தாளான தன்
அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை
தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு
மறுமணையாட்டியாக்கி
கொடுத்தாள்.
(ஆதியாகமம் 16:3)
சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே
தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில்
வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து
இஸ்மவேலை பெற்றெடுக்கிறார்.
கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின்
மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை
தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர்
எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள்.
ஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம்
பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது
வயதாயிருந்தான்.
அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம்
விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று
வயதாயிருந்தான்.
(ஆதியாகமம் 17:23-25)
ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள
மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன்
என் குமாரனாகிய ஈசாக்கோடே
சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்.
தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம்
ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.
(ஆதியாகமம்
21:10-11)
இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று
வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக
மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள்
யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
நாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள்
அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி
படிக்கும் யாவரும் இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல்
பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.
எந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை
அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பினாரோ அதே
தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில்
பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப் பின்பற்ற
சொல்லியுள்ளான்.
இயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று
யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை
புறக்கணிக்கவில்லை. மாறாக இயேசுவை அனுப்பிய அந்த
தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும்.
கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா...?
மறுப்பும் - தெளிவும் விரைவில்
நமது கட்டுரைக்கு மறுப்பெழுதி அதை பல இணையங்கள்
மற்றும் வலைப்பூக்களில் பதித்து வரும் அந்த
சகோதரர்களின் பதில்களில் உள்ள நேர்மையை இனி தொடராக
காண்போம். (தேவன் நாடட்டும்)
|